ஒரு வேண்டுகோள்

நண்பர்களே,

செங்கொடி தளத்தின் இடுகைகளை முழுமையாக பார்வையிடுவதற்கும், உங்கள் பின்னூட்டங்களை பதிவதற்கும் senkodi.wordpress.com க்கு வருகை தாருங்கள்.

தோழமையுடன்
செங்கொடி

Thursday, February 11, 2010




நண்பர்களே,

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கையிலிருக்கும் போர்க்கருவி. இந்திய ஆளும் வர்க்கமான முதலாளிகளும், தரகுப் பண்ணைகளும் மக்கள் மீது தொடுத்திருக்கும் போர் தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர். நக்சல் ஒழிப்பு என்பது ஒரு காரணம், முதலாளிகளுக்கு எதிரான மக்களையும், முதலாளிகளுக்கு எதிரான மனோநிலையையும் அழித்து, துடைத்து எறிவது தான் நோக்கம். தீவிரவாதம், முன்னேற்றம் என்ற சொற்களையெல்லாம் யாருக்கு எதிரான தீவிரவாதம், யாருக்கு ஆதரவான முன்னேற்றம் என பிரித்து அறிந்து கொள்ள முடிந்தால் நக்சல்களுக்கு எதிரான போர் யாருக்கு எதிராக யார் நடத்தும் போர் என்பது தெளிவாகும். பிப்ரவரி 20 ல் நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் அவ்வாறான பகுத்தறிதலை உங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கும்.

வாருங்கள்,

உங்கள் குடும்பத்தினரோடு

உங்கள் நண்பர்களோடு

ஆம் நண்பர்களே, நம் மீதான போரை நாம் எதிர்ப்பதன் முதல்படி இது.

தொடர்புக்கு: (0091) 9710082506

(0091) 9444834519


No comments: