ஒரு வேண்டுகோள்
Sunday, September 26, 2010
நிலவை உடைத்து ஒட்டிய அல்லா
Wednesday, September 22, 2010
அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?
Tuesday, September 21, 2010
ஈராக் சிறை சித்திரவதை
காணொளியில் புதியது
Monday, September 20, 2010
Sunday, September 19, 2010
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்
நண்பர்களே, தோழர்களே,
Wednesday, September 15, 2010
காஷ்மீரில் கல்லெறிந்தால் தில்லியில் விழுமா?
Tuesday, September 7, 2010
செப்டம்பர் நினைவுகள்
காணொளியில் புதியது
Monday, September 6, 2010
மாசேதுங்குடன் சில செவ்விகள்
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௫
கம்யூனிஸ்ட் அகிலம், சீனா, வெளி மங்கோலியா பற்றி
Thursday, September 2, 2010
ஆரியவதியும் சில ஆணிகளும்
ஆரியவதிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு எதிராக நமது குரலை பதிவு செய்யும் இந்நேரத்தில் இன்னொன்றையும் பதிவு செய்வது தேவையாக இருக்கிறது. ஆரியவதி விவகாரத்தை சிங்கள் ஊடகங்கள் ஒரு அரசியல் வடிவமாக முன்னெடுக்கின்றன. சௌதி தூதரகத்திடம் தனது கண்டனங்களை பதிவு செய்வது, இலங்கைப் பெண்கள் சௌதிக்கு வேலைக்காக செல்வதை தடை செய்யவிருப்பதாக செய்தி பரப்புவது என்று இலங்கை அரசுடன் இணைந்து உலக அரங்கில் முந்தள்ளுவதன் மூலம் இலங்கையில் இன்றளவும் நிகழ்ந்துவரும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும் வதைகளையும் மறைக்க முயல்கிறது.
முழுவதும் வாசிக்க
Tuesday, August 31, 2010
இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்
நூலகத்தில் புதியது
Monday, August 30, 2010
அணுவிபத்து இழப்பீடு மன்னிக்கவும் தப்பவைக்கும் மசோதா நிறைவேறியது
Wednesday, August 25, 2010
நாங்கள் வரலாறு படைத்தோம்
நூலகத்தில் புதியது
Monday, August 23, 2010
ஆதி மனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௪
Sunday, August 22, 2010
ஐநா தலைமையகம் முன் சிவந்தன்
காணொளியில் புதியது
Wednesday, August 18, 2010
உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக….
தொடர்ந்து படிக்க
Tuesday, August 17, 2010
தோழர்களின் போராட்டக் களத்தில் நான்
நூலகத்தில் புதியது
Sunday, August 15, 2010
சுதந்திரம் என்றொரு கற்பிதம்
முழுமையாக படிக்க
Saturday, August 14, 2010
மற்றவள் - குறும்படம்
காணொளியில் புதியது
Thursday, August 12, 2010
கொலைகார “டௌ” வே வெளியேறு
கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!
போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை..
போபால் – காலம் கடந்த அநீதி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,
போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.
அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.
தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்
குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.
இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.
26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.
காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.
நீதி வேண்டுமா?.
நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..
கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
முற்றுகை
ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,
பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.
பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.
அனைவரும் வருக
-
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி
-
தொடர்பு கொள்ள:
ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
வினவு : 97100 82506
நன்றி: வினவு
Wednesday, February 17, 2010
செல்பேசியை கடித்துக்கொண்டு நான்கு காரை சாப்பிடலாமா?
உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அரிசி பருப்பு தொடங்கி சர்க்கரை வரை விலை எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. சாமானிய உழைக்கும் மக்கள் விலை உயர்வினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தக்கவலை நாட்டின் பிரதமருக்கும், முதலமைச்சர்களுக்கும் வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் தான் பிரதமர் முதலமைச்சர்களின் மாநாட்டடைக் கூட்டி விலைவாசி உயர்வு குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். அதுவும் புனே குண்டுவெடிப்பிற்கு பிறகு உள்நாட்டு பாதுகாப்பின் முக்கியத்துவம் கூடி விட்டது. கஞ்சியில்லாதவன் சாவதை விட குண்டுவெடித்து சாவது அதிர்ச்சியானது தானே.
ஒரு ரூபாய் அரிசி திட்டம் செயல் படுத்தப்படுவதாலும், பத்து வகையான மளிகைப் பொருட்கள் ஐம்பது ரூபாய்க்கு வழங்கப்படுவதாலும் தமிழக மக்கள் பசிஎனும் சொல்லை அறியாமல் வாழ்கிறார்கள் எனவே காவல்துறையை நவீனப்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அதிக நிதி தாருங்கள் என்று கேட்டுவிட்டு வந்திருக்கிறார் மாநாட்டில் கலந்து கொண்ட துணைமுதல்வர். பிரதமரோ பருவமழை பொய்த்து உற்பத்தி குறைந்ததால்தான் விலை உயர்ந்ததாக அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் நிஜமோ வேறு மாதிரி இருக்கிறது. ஒருவரோ அல்லது ஒரு நிறுவனமோ 50000 டன் வரை உணவு தானியங்களை சேமித்து வைத்துக்கொள்வதற்கு சட்டப்படி அனுமதி இருக்கிறது. சட்டப்படி பதுக்கிவைத்து கொள்ளையடிப்பவர்களை தண்டிப்பது எப்படி என்பதை அவர் சொல்லவில்லை.
விலைவாசி உயர்வு என்றது மழை பொய்த்துவிட்டது உற்பத்தி குறைவு என்று காரணம் கூறுவது வழக்கமாகி இருக்கிறது. ஆனால் விலை உயர்வுக்கு உற்பத்திக்குறைவு காரணமல்ல என்பது தான் உண்மை. எடுத்துக்காட்டாக 2009 காரீப் பருவ பருப்பு சாகுபடியில் பருப்பு உற்பத்திக் குறைவு 7 சதவீதம் மட்டுமே. பெரும்பகுதி பருப்பு உற்பத்தி ரபி பருவத்தில் நடக்கிறது. ரபி பருவ பருப்பு சாகுபடி குறைவின்றியே இருக்கின்றது. ஆனாலும் பருப்புவிலை மடங்குகளில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பருப்புவிலை உச்சத்தை தொட்டபோது ஊகவணிகத்திற்கு தடை என்று சில நாட்கள் நாடகமாடினார்கள். ஊகவணிகம் தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிந்திருந்தும், அதை தடை செய்வது குறித்து மூச்சுவிடக்கூட மறுக்கும் இவர்களா மக்களைப்பற்றி கவலைப்படுவார்கள்?
உலகில் பிரேசிலுக்கு அடுத்து இந்தியாவில்தான் கரும்பு சாகுபடி அதிகம், ஆனால் சர்க்கரைவிலை மட்டும் முதலிடத்தில். இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் அவர்கள் மறந்தும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளக்கூடாது என்பதால் தான் சர்க்கரை விலையை இறங்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்று விளக்கம் கொடுக்கவேண்டியது தான் மிச்சம். உணவுப்பொருட்கள் விலை உயர்வுக்கு பதில் சொல்லவேண்டிய அமைச்சரின் கட்சி இதழ் ‘ராஷ்ட்ரியா’ சர்க்கரை சாப்பிடாவிட்டால் இறந்துவிட மாட்டீர்கள் என்று தலையங்கம் தீட்டுகிறது. விலை உயர்வுக்கு சரத்பவார் தான் காரணம் என காங்கிரஸ் மெதுவாக நழுவப்பார்க்க, பிரதமரின் ஆலோசனைப்படி தான் நான் நடந்துகொள்கிறேன் என்று இவர் பதிலடி கொடுக்கிறார். ஆனால் பொதுவிநியோகத்திற்கென ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த 72,684 டன் சர்க்கரையை தனியாருக்கு விற்றது யாருடைய ஆலோசனையின்படி என்பதை மட்டும் யாரும் சொல்லவில்லை.
கடந்த நவம்பர் மாத கொள்முதல் குறியீட்டின்படி மொத்த கொள்முதல் விலை உயர்வு 4.78 விழுக்காடு, அதாவது கொள்முதல் அளவில் அதிகரித்த விலை உயர்வு 4.78 விழுக்காடு, ஆனால் நுகர்வோர் அளவில் அதிகரித்த விலைஉயர்வு 11முதல் 19விழுக்காடு வரை. இது விலை உயர்வின் காரணி எங்கிருக்கிறது என்பதை காட்டுகிறது. விளைவிக்கும் விவசாயி கடன்தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறான். நுகரும் மக்களோ விலையுயர்வின் பாரம் தாங்காமல் துவழுகிறார்கள். இந்த விலையுயர்வின் காரணிகளை அறிந்துகொண்டே அரசு பருவமழை, உற்பத்திக்குறைவு என்று திசைதிருப்புகிறது.
கொள்முதல் விலையை உயர்த்திக்கேட்டு போராடும் விவசாயிகளை அலட்சியம் செய்யும் அரசு; விவசாயிகளுக்கு கொடுக்கும் கொள்முதல் விலையைவிட ஒன்றரை மடங்கு அதிகமான விலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. அதுமட்டுமன்றி அரசு நேரடியாக கொள்முதல் செய்வதிலிருந்து விலகி விவசாயிகளை தனியார் கொள்முதல் நிலையங்களை நோக்கி தள்ளிவிடுகிறது. இன்னொருபக்கம் சில்லறை விற்பனையிலும்கூட பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்திருப்பதன் மூலம், உற்பத்தி விநியோகம் இரண்டையும் தனியாரின் பொறுப்பில் விட்டுள்ளது. இப்படி மக்களை தனியாரை பன்னாட்டு, தரகு முதலாளிகளை சார்ந்திருப்பவர்களாக மாற்றிவிட்ட பிறகும், உணவுதானியங்கள் பதுக்கிவைப்பதற்கு சட்டபூர்வ அனுமதி வழங்கிவிட்ட பிறகும் விலைவாசி உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் எனும் அரசை எப்படி நம்புவது?
அறிவுத்துறையினர் விலைஉயர்வு குறித்து கூறுகையில் உலக அளவில் விலை உயர்வு இருக்கும் போது இந்திய அளவில் அதை தவிர்க்கமுடியாது என்கின்றனர். எந்தப்பொருட்களின் விலை உயர்கிறது எந்தப்பொருட்களின் விலை குறைகிறது என்பதை கவனித்தாலே இதன் பின்னால் தொழிற்படும் அரசியல் புலப்பட்டுவிடும். உலகின் ஒட்டுமொத்த உற்பத்திப்பொருட்களை எடுத்துக்கொண்டால், எந்த நிலையிலும் மக்கள் வாங்கியே ஆகவேண்டும் எனும் நிலையிலுள்ள அத்தியாவசியப் பொருட்களான உணவு முதலானவற்றின் விலை உயர்ந்துகொண்டே செல்ல, அலங்காரப் பொருட்களான செல்பேசி முதல் வாகனங்கள் மின்னணுவியல் பொருட்கள் வரை விலை குறைந்துகொண்டே செல்கிறது. மக்களை வாங்கவைக்க வேண்டுமென்றால் விலை குறையும். வாங்கியே தீரவேண்டும் என்றால் விலை கூடும். மக்களின் உழைப்பை திருடுவதல்லாத வேறு என்ன காரணம் இதில் இருக்கிறது? இதில் உற்பத்திக்குறைவு எங்கு வருகிறது?
அன்றாடம் உழைத்து களைக்கும் பாட்டாளி உண்ணமுடியாத அளவில் விலை உயர்வு இருக்கையில் செல்பேசியும், காரும் விலைகுறைந்தால் இரவு உணவுக்கு செல்பேசியை கடித்துக்கொண்டு காரையா சாப்பிடமுடியும்?
:
Sunday, February 14, 2010
ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் – ௧
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௫
நான் ஷாங் ஷா செல்வதற்கு விருப்பம் கொள்ளத் தொடங்கினேன். மாகாணத் தலைநகரான இந்தப் பெருநகரம் எனது ஊரிலிருந்து 120லி தூரத்தில் இருந்தது. இது ஒரு மாபெரும் நகரம், பெருமளவிலான மக்களையும் பாட சாலைகளையும் ஆளுநரின் ஆட்சிப் பணிமனைகளையும் தன்னகத்தே கொண்டது. இந்த நேரத்தில் அங்கு சென்று சியாங் சியாங் மக்களுக்கான நடுத்தரப் பாடசாலையில் சேர்ந்துகொள்ள நான் பெருவிருப்பமுடையவனாக இருந்தேன். அந்த மாரிக்காலத்தில் உயர் ஆரம்பப் பாடசாலையில் உள்ள ஒரு ஆசிரியரிடம் என்னை அங்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டினேன். அதற்கு அந்த ஆசிரியர் ஒத்துக்கொண்டார். மிகுந்த உற்சாகத்தோடு ஷாங் ஷா வுக்கு நடந்தே சென்றேன். இந்தப் பெரிய பாடசாலையில் எனக்கு அனுமதி கிடைக்காமல் போகலாம் என்ற பயத்துடனும், அந்தப் பாடசாலையில் மாணவனாகும் வாய்ப்புக்கிட்டும் எனும் நம்பிக்கை இல்லாமலும்தான் அங்கு சென்றேன். ஆச்சரியத்திற்குரிய வகையில் எவ்வித சிரமமுமின்றி நான் அப் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டேன். ஆனால் அரசியல் நிகழ்வுகள் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தன. அந்த பாடசாலையில் நான் ஆறு மாதங்கள் மட்டுமே கல்வி பயின்றேன்.
ஷாங் ஷாவில் ஒரு செய்தித்தாளை முதன்முறையாக படித்தேன். மின் லி பாவோ(மக்கள் பலம்) என்ற இந்த தேசிய புரட்சிகர சஞ்சிகை, மஞ்சு அரச வம்சத்திற்கு எதிராக நடைபெற்ற காண்டான் எழுச்சி பற்றியும் ஹீவாங் சிங் என்ற ஹூனான்வாசியின் தலைமையில் 72 மாவீரர்கள் இறந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியால் நான் வெகுவாகக் கவரப்பட்டேன், அத்துடன் மில் யூ யென் (பின்பு ஒரு புகழ் பெற்ற கோமிண்டாங் தலைவரானவர்). இதே காலத்தில் நான் சுன் யாட் சென்னைப் பற்றியும் ருங் மென் ஹுய் திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். (ருங் மென் ஹுய் என்பது ஒரு ரகசியக்குழு. சுன் யாட் சென்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக்குழு தான் கோமிண்டாங் கட்சிக்கான முன்னோடி. இதன் பெரும்பாலான உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டவர்களாக ஜப்பானில் வாழ்ந்தார்கள். சீர்திருத்த அரச வம்ச கட்சியின் தலைவர்களான சி சாவ், காங் யூ வெய் ஆகியோருக்கு எதிராக இவர்கள் ஜப்பானில் இருந்துகொண்டு பேனா முறையில் கடும் யுத்தம் நடத்தினார்கள்) நாடு முதலாவது புரட்சிக்கு தயாரான நிலையில் இருந்தது. எனக்கு ஏற்ப்பட்ட மனக்குமுறல் காரணமாக நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதை பாடசாலை சுவரில் ஓட்டினேன். ஒரு அரசியல் கருத்து(நோக்கு) பற்றிய எனது முதல் வெளிப்பாடு அதுதான். ஆனால் அந்தக் கட்டுரை ஒரு குழப்பமானதாக இருந்தது. நான் அப்போதும் லியாங் சி சாவ், காங் யூ வெய் ஆகியோர் மீதான வியந்து போற்றுதலைக் கைவிடவில்லை. அவர்களிடையே உள்ள வித்தியாசங்களை நான் தெளிவாக விளங்கிக்கொள்ளவில்லை. ஆகவே எனது கட்டுரையில் சுன் யாட் சென் ஜப்பானிலிருந்து புதிய அரசின் ஜனாதிபதியாக்கப்பட வேண்டும், காங் யூ வெய் பிரதமராக்கப்பட வேண்டும், லியாங் சி சாவ் வெளிநாட்டரசராக்கப்பட வேண்டும் என்று நான் முன்மொழிந்திருந்தேன். இது ஒரு பொருத்தமற்ற கூட்டணி, காங்கும் லியாங்கும் முடியாட்சி ஆதரவாளர்கள், சுன் யாட் சென் முடியாட்சி எதிர்ப்பாளர்.
சிச்சுவான் ஹான் கௌ ரயில்வே கட்டமைப்பு சம்மந்தமான அந்நிய முதலீட்டு எதிர்ப்பு இயக்கமும், ஒரு பாராளுமன்றத்தை அமைக்குமாறு எழுந்த பொதுமக்களின் கோரிக்கையையும் பரவலான முறையில் எழுந்தது. இதற்கான பதிலாக, ஒரு ஆலோசனைக்குழு அமைக்க மட்டுமே பேரரசர் ஆணையிட்டார். எனது பாடசாலை மாணவர்கள் மேலும் மேலும் தீவிர விவாதங்களில் ஈடுபட்டனர். தங்களின் தலைமயிர்ப் பின்னலுக்கு எதிராக ஒரு புரட்சியை நடத்தியதன் மூலம் தங்களுடைய மஞ்சு எதிர்ப்பு உணர்ச்சிகளை மாணவர்கள் வெளிக்காட்டினர். ஒரு நண்பரும் நானும் எங்களுடைய பின்னல்களை வெட்டிவிட்டோம். ஆனால் அவ்வாறு வெட்டுவதாக முன்பு உறுதியளித்திருந்த ஏனைய மாணவர்கள், பிற்பாடு தங்களுடைய வாக்குறுதியை காப்பாற்றத் தவறிவிட்டனர். எனது நண்பனும் நானும் அவர்களை ரகசியமாகத் தாக்கி அவர்களுடைய பின்னல்களை வலுக்கட்டாயமாக வெட்டினோம். எங்களுடைய கத்திரிக்கோலுக்கு பத்திற்கும் மேற்பட்ட பின்னல்கள் பலியாயின.
இதன் மூலம் ஒரு குறுகிய காலத்திற்குள் ‘போலி வெளிநாட்டுப் பிசாசின்’ போலிப்பின்னல்களை கேலி செய்வதிலிருந்து பின்னல்களை பொதுவாகவே ஒளிக்கவேண்டுமேன்று கோருமளவிற்கு நான் முன்னேறியிருந்தேன். ஒரு அரசியல் சிந்தனை ஒரு எண்ணக்கருத்தை எவ்வாறு மாற்றமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இது.
சட்டக்கல்லூரியில் பயின்ற ஒரு நண்பனுடன் இந்த பின்னல் விடயத்தில் நான் பிரச்சனைப்பட்டேன். இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் எதிரெதிர் கோட்பாடுகளை முன்வைத்தோம். உடல், தோல், நகங்கள் ஆகியவை ஒவ்வொருவரது பெற்றோராலும் வழங்கப்பட்ட ஒரு பரம்பரை சொத்து. ஆகவே அவை அழிக்கப்படக்கூடாது என்று புராதன இலக்கிய நூலை உதாரணம் காட்டி தனது வாதத்தை வென்றெடுக்க அந்த சட்ட மாணவன் முயன்றான். ஆனால் நானும் பின்னல் எதிர்ப்பாளர்களும் மஞ்சு எதிர்ப்பு அரசியல் அடிப்படையில் ஒரு எதிர்க்கோட்பாட்டை உருவாக்கி அவனை முழுமையாக வாயடைக்க வைத்தோம்.
வியுவான் ஹாங் தலைமையில் சாகன் கிளர்ச்சி நடைபெற்றதும் (1911ஆம் ஆண்டு மஞ்சு முடியாட்சியை தூக்கியெறிந்த புரட்சியின் தொடக்கம்) ஹூனானில் ரானுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அரசியல் சூழ்நிலை விரைவாக மாறியது. ஒரு நாள் ஒரு புரட்சிவாதி நடுத்தரப் பாடசாலையில் தோன்றி பாடசாலை அதிபரின் அனுமதியுடன் ஒரு கிளர்ச்சியான சொற்பொழிவை நிகழ்த்தினார். இந்தக்கூட்டத்தில் இருந்த ஏழு அல்லது எட்டு மாணவர்கள் ஆட்சியை கடுமையாக தாக்கினார்கள். அத்தோடு குடியரசை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்கள். அனைவரும் முழுமையான கவனத்தோடு சொற்பொழிவை கேட்டார்கள். கிளற்சியுற்றிருந்த மாணவர்கள் முன்னால் வியுவான் ஹாங்கின் அதிகாரிகளில் ஒருவரான அந்த புரட்சிச்சொற்பொழிவாளர் உரையாற்றியபோது ஒரு சிறு ஓசையும் எழவில்லை.
இந்த சொற்பொழிவைக் கேட்டு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பின்பு லி யுவான் ஹாங்கின் புரட்சிகர ராணுவத்தில் சேர நான் உறுதிபூண்டேன். வேறுபல மாணவர்களோடு ஹன் கோவுக்கு செல்ல நான் முடிவு செய்தேன். வகுப்புத்தோழர்களிடமிருந்து சிறிதளவு பணத்தை நாங்கள் சேகரித்தோம். ஹன் கோவின் வீதிகள் மிகுந்த ஈரமானவை என்றும் மழைக்கால சப்பாத்துகள் அங்கு அவசியம் என்றும் கேள்விப்பட்டு, நகரத்திற்கு வெளியே தங்கியிருந்த ராணுவத்தில் உள்ள ஒரு நண்பனிடம் சில சப்பாத்துகள் கடனாக பெறச்சென்றேன். ராணுவத்தின் கொத்தளக்காவலர்களால் நான் தடுத்து நிருத்தப்பட்டேன். இந்த இடம் சந்தடிமிக்கதாக இருந்தது. முதற்தடவையாக துருப்புகளுக்கு துப்பாக்கிக்குண்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் தெருக்களுக்குள் பெரும் எண்ணிக்கையில் நுழைந்துகொண்டிருந்தனர்.
காண்டான் ஹன்கோ ரயில் பாதையினூடாக புரட்சியாளர்கள் நகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். சண்டை அங்கு தொடங்கிவிட்டது. ஷாங் ஷாவின் நகர மதில்களுக்கு அப்பால் ஒரு பெரிய சமர் இடம்பெற்றுள்ளது. அதேவேளை நகரினுள்ளே ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது, அத்தோடு நகர வாயிற்கதவுகள் தாக்கப்பட்டு சீனத்தொழிலாளர்களால் கைப்பற்றப்பட்டன. இந்தக் கதவுகளில் ஒன்றின் வழியாக நான் நகரினுள் நுழைந்தேன். பின்பு ஒரு உயரமான இடத்தில் நின்று சமரை அவதானித்தேன். இறுதியாக ஆளுநரின் அரசுப் பணிமனையின் மீது ஹான் கொடி ஏற்றப்படுவது வரையில் இருந்தேன். அதில் ஹான் என்ற எழுத்து இருந்தது. நான் பாடசாலைக்கு திரும்பினேன், அது ரானுவக்காவலர்களினால் காவல் காக்கப்பட்டிருந்தது.
அடுத்த நாள் ஒரு ராணுவ அரசு நிறுவப்பட்டது (டுட்டு என்பது ராணுவ ஆளுனரைக் குறிக்கும்) கீ வாவோ ஹுய்(மூத்த சகோதரர் சங்கம்) சங்கத்தை சேர்ந்த பிரபல இரண்டு உறுப்பினர்கள் ஆளுனர்களாகவும், சென் சோ சிங் உதவி ஆளுனராகவும் பதவியேற்றனர். மாகாண ஆலோசனைக்குழுவில் முன்னைய கட்டிடத்தில் புதிய அரசு நிறுவப்பட்டது. இதன் தலைவராக இருந்த ரான் யென் காய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த ஆலோசனைக்குழுவும் கலைக்கப்பட்டது. புரட்சிவாதிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மஞ்சு ஆவணங்களிடையே பாராளுமன்றம் ஒன்றை திறக்குமாறு கோரும் ஒரு கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் காணப்பட்டன. இதன் மூலப்பிரதி சுடேலியினால் இரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது. அவர் தற்போது சீன சோவியத் அரசின் கல்வி ஆணையாளராக கடமையாற்றுகிறார். தனது உறுதிப்பாட்டையும் நேர்மையையும் எடுத்துக்காட்டும் விதமாக தனது கை விரலின் முன்பகுதியை வெட்டித்தான் இக்கடிதத்தை எழுதினர். அவரது கோரிக்கைக்கடிதம் பாராளுமன்றம் திறக்கப்படவேண்டுமேன்று கோரி, எனது விரலை வெட்டுவதுடன் நான் விடைபெறுகிறேன் (பீகிங்கின் மாகாணப் பிரதிநிதிகளிடம்) என்று முடிந்திருந்தது.
புதிய ராணுவ ஆளுநர்களும் உதவி ஆளுநரும் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. அவர்கள் கெட்ட மனிதர்கள் அல்ல, அத்தோடு அவர்களுக்கு புரட்சிகர நோக்குகளும் இருந்தன. ஆனால் அவர்கள் ஏழைகள் அத்தோடு அடக்கப்பட்டவர்களின் நலன்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். நில உடமையாளர்களும் வர்த்தகர்களும் இவர்களோடு அதிருப்தி கொண்டிருந்தனர். சில நாட்களுக்குள் நான் ஒரு நண்பனைக் காணச்சென்றபோது வீதியிலே அவர்களது சடலங்களைப் பார்த்தேன். ரான் யென் காய், ஹூனான் நில உடைமையாளர்கள், ராணுவத்தினரின் பிரதிநிதியாய் செயல்பட்டு அவர்களுக்கெதிராக ஒரு கிளர்ச்சியை ஏற்பாடு செய்திருந்தான்.
தற்போது பல மாணவர்கள் ராணுவத்தில் செர்ந்துகொண்டிருந்தார்கள். ஒரு மாணவ ராணுவம் நிறுவப்பட்டிருந்தது. இந்த மாணவர்களிடையே ராங் செங் சியும் இருந்தார் (1972 இல் வாங் சிவ் வெய்யின், ஷகான் அரசினுடைய தேசியவாதிகளின் ரானுவத்தினுடைய கமாண்டராக பின்பு ராங் செங் சி இருந்தார். அவர் வாங்கையும் கம்யூனிஸ்டுகளையும் காட்டிக்கொடுத்து ஹூனானின் விவசாயப்படுகொலையை தொடங்கினார்) நான் மாணவ ராணுவத்தை விரும்பவில்லை. இந்தக்கட்டமைப்பின் அத்திவாரம் குழப்பமானதாக இருப்பதை நான் உணர்ந்தேன். இதற்கு மாறாக மரபுமுறை ராணுவத்தில் சேர நான் விரும்பினேன். அதன் மூலம் புரட்சியை முழுமையாக்க நினைத்தேன். சிங் பேரரசர் இன்னும் பதவி துறக்கவில்லை. அத்தோடு போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
எனது சம்பளம் மாதத்திற்கு ஏழு யுவானாக இருந்தது, இருப்பினும் அது தற்போது நான் செஞ்சசேனையில் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும். நான் இப்பனத்தில் உணவுக்காக மாதம் ஒன்றுக்கு இரண்டு யுவான் செலவழித்தேன். தண்ணீரையும் விலை கொடுத்தே வாங்கவேண்டியதிருந்தது. படைவீரர்கள் நகருக்கு வெளியிலிருந்தே தண்ணீர் எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். நான் மாணவனாக இருந்தபடியால் தண்ணீரை அவ்வாறு கொண்டுவர முடியவில்லை. தண்ணீர் விற்பவர்களிடம் வாங்கினேன். எனது சம்பளத்தில் மிகுதிப்பணம் செய்தித்தாள் வாங்குவதில் செலவழிந்தது. நான் செய்தித்தாள் வாசிப்பதில் பற்றுள்ள வாசகனாகினேன். அப்போது புரட்சியோடு தொடர்புடைய சஞ்சிகைகளில் சியாங் சியாங் ஜிபவோ (சியாங் நதி தினச்செய்தி) இருந்தது. அதில் சோசலிசம் பற்றி விவாதிக்கப்பட்டது, இதிலிருந்த செய்திப்பத்திகளில் தான் சோசலிசம் எனும் சொல்லை நான் அறிந்துகொண்டேன். நானும் சோசலிசத்தைப் பற்றி விவாதித்தேன். உண்மையில் சமூக சீர்திருத்தம் பற்றிய விடயத்தை ஏனைய மாணவர்களுடனும், படைவீரர்களுடனும் விவாதித்தேன். சோசலிசம் பற்றியும் அதன் கொள்கைகள் பற்றியும் சியாங் காங் ஹூ எழுதிய சில துண்டுப் பிரசுரங்களையும் நான் படித்தேன். இந்த விடயம் குறித்து எனது வகுப்பு மாணவர்களில் பலருக்கு உற்சாகத்துடன் எழுதினேன். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும்தான் எனக்கு ஆதரவாக விடையளித்தார்.
எனது குழுவில் ஒரு ஹூனான் சுரங்கத்தொழிலாளியும், ஒரு இரும்பு வேலைத் தொழிலாளியும் இருந்தனர். அவர்களை நான் மிகவும் நேசித்தேன். ஏனையோர் வெகு சாதாரணமானவர்கள், அவர்களில் ஒருவன் கெட்டவன். மேலும் இரண்டு மாணவர்களை நான் ராணுவத்தில் சேர தூண்டினேன். எனது பிளாட்டூன் கமாண்டருடனும் பெரும்பாலான படைவீரர்களுடனும் நான் நட்புவைத்திருந்தேன். என்னால் எழுத முடியும் அத்தோடு புத்தகங்களைப்பற்றி எனக்கு சிறிது அறிவு இருந்தது. எனது ‘மகத்தான கல்வியை’ அவர்கள் கௌரவித்தார்கள். அவர்களுக்கு கடிதங்கள் எழுதி உதவுவதிலும் அது போன்ற வேறு பணிகளிலும் என்னால் உதவ முடிந்தது.
புரட்சியின் பெறுபேறு இன்னமும் தீர்க்கமாக முடிவுசெய்யப்படாத நிலையில் இருந்தது. தலைமைத்துவம் சம்பந்தமாக இன்னமும் கோமிண்டாங் கட்சிக்குள் வேறுபாடுகள் இருந்தன. அதேவேளை சிங்(பேரரசர்) தனது அதிகாரத்தை முழுமையாக கைவிட்டுவிடவுமில்லை. மேலும் போர் நடப்பது சாத்தியமே என்று ஹூனானில் கூறப்பட்டது. மஞ்சு ஆட்சியினருக்கும் யுவான் ஷூ காய்க்கும் எதிராக பல ரானுவங்கள் திரட்டப்பட்டன.
(யுவான் ஷூ காய் மஞ்சு ஆட்சியாளர்களின் ராணுவத்தின் பிரதம தளபதியாக இருந்தவர். 1911ம் ஆண்டு மஞ்சு ஆட்சியாளர்களை பதவியிறங்க வைத்தவர்) இதில் ஹூனான் படை நடவடிக்கையில் இறங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது சுன் யாட் சென்னும் யுவான் ஷூ காயும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். ஏற்பட இருந்த யுத்தம் இதனால் தவிர்க்கப்பட்டது. வடக்கும் தெற்கும் இணைக்கப்பட்டன. நான்கிங் அரசு கலைக்கப்பட்டது. புரட்சி முடிந்துவிட்டதாக எண்ணிய நான், ராணுவத்திலிருந்து விலகி எனது கற்கை நெறிக்கு திரும்பத் தீர்மானித்தேன். நான் ஆறு மாதங்கள் படைவீரனாக இருந்தேன்.
Thursday, February 11, 2010
நண்பர்களே,
அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கையிலிருக்கும் போர்க்கருவி. இந்திய ஆளும் வர்க்கமான முதலாளிகளும், தரகுப் பண்ணைகளும் மக்கள் மீது தொடுத்திருக்கும் போர் தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர். நக்சல் ஒழிப்பு என்பது ஒரு காரணம், முதலாளிகளுக்கு எதிரான மக்களையும், முதலாளிகளுக்கு எதிரான மனோநிலையையும் அழித்து, துடைத்து எறிவது தான் நோக்கம். தீவிரவாதம், முன்னேற்றம் என்ற சொற்களையெல்லாம் யாருக்கு எதிரான தீவிரவாதம், யாருக்கு ஆதரவான முன்னேற்றம் என பிரித்து அறிந்து கொள்ள முடிந்தால் நக்சல்களுக்கு எதிரான போர் யாருக்கு எதிராக யார் நடத்தும் போர் என்பது தெளிவாகும். பிப்ரவரி 20 ல் நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் அவ்வாறான பகுத்தறிதலை உங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கும்.
வாருங்கள்,
உங்கள் குடும்பத்தினரோடு
உங்கள் நண்பர்களோடு
ஆம் நண்பர்களே, நம் மீதான போரை நாம் எதிர்ப்பதன் முதல்படி இது.
தொடர்புக்கு: (0091) 9710082506
(0091) 9444834519