ஒரு வேண்டுகோள்

நண்பர்களே,

செங்கொடி தளத்தின் இடுகைகளை முழுமையாக பார்வையிடுவதற்கும், உங்கள் பின்னூட்டங்களை பதிவதற்கும் senkodi.wordpress.com க்கு வருகை தாருங்கள்.

தோழமையுடன்
செங்கொடி

Sunday, September 26, 2010

நிலவை உடைத்து ஒட்டிய அல்லா


இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௫

இந்த வரைகலை படம் தான் 54:1 வசனத்திற்கு ஆதாரமாம்.
நிலா பூமியின் ஒரே துணைக்கோள். சராசரியாக‌ 3,84,403 கிமீ தூரத்தில் நீள்வட்டப்பாதையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிவருகிறது. புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே கொண்டிருந்தாலும், நிலவின் தாக்கம் பூமியில் குறிப்பிடத்தகுந்த அளவு செயல்படுகிறது. வானவியல் ஆய்வுகளில் மனிதர்களின் முன்னேற்றம் பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மீப்பெரும் சாதனைகள் வானவியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. விண்கற்களின் மோதல்கள் தொடங்கி நெபுலாக்கள், புழுத்துளைகள் ஈறாக வானவியல் மாற்றங்களை நுணுக்கமாக கவனித்துக்கொண்டிருக்கிறான். ஒரு கோளோ, விண்மீனோ, விண்கற்களோ உடைந்துபோய் மீண்டும் ஒட்டிக்கொன்டு பழைய நிலையிலேயே செயல்படமுடியும் என்பதற்கான எந்தவித வாய்ப்பும் வானவியலில் இல்லை. ஆனால் குரானில் அப்படியான ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Wednesday, September 22, 2010

அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் ஆஸ்திரேலியாவை நோக்கி திரும்பியிருந்தன. சில மாணவர்கள் தாக்கப்பட்டதை அனைத்து ஊடகங்களும் திறமையாக மொழிபெயர்த்து இந்தியாவின் பொது வேதனையாக மக்களை உணரச் செய்திருந்தன. அமெரிக்க இந்தியர்களின் வரதட்சனைக் கொடுமைகளும், கண்ணீரும் கூட இந்தியாவில் உழலும் மக்களின் இதயத்தில் ஊடுறுவி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுபோன்றே எதிர்வினைகளையும் ஆதரவையும் கோரும் வேறுசில செய்திகளோ எவ்வித கேள்விகளையும் நம்முள் எழுப்பாது கடந்துவிடுகின்றன. ஊடகங்கள் இவற்றை முதன்மைப்படுத்துவதில்லை, ஒரு மூலைச் செய்தியாக கடந்துவிடுகின்றன. தம் உளக்கிடக்கையோடு மோதும் பரிசீலனையை கோருவதால் மக்களும் கூட இதுபோன்ற செய்திகளின் கணபரிமாணங்களை நிறுத்துப்பார்க்க விரும்புவதில்லை.

Tuesday, September 21, 2010

ஈராக் சிறை சித்திரவதை

காணொளியில் புதியது


ஈராக் சிறைச்சாலை ஒன்றில் மின் அதிர்ச்சி கொடுத்து ஒரு கைதியை சித்திரவதை செய்யும் காட்சி. ஆளும் வர்க்கங்கள் தம் விருப்பங்களை சாதகமாக்கிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கான அத்தாட்சி.


Monday, September 20, 2010

சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும்

நூலகத்தில் புதியது




சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும் - லெனின்

Sunday, September 19, 2010

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்

நண்பர்களே, தோழர்களே,

 
தோழர் மாவோவின் வாழ்வை சுருக்கமாக, தெளிவாக எடுத்துக்காட்டிய “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்பட்டது. அத‌னைத் தொடர்ந்து, தோழர் இரயாகரனின் “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்படவிருக்கிறது. இது இன்னும் நூலாக வெளிவரவில்லை என்றாலும் தோழரின் சிறப்பு அனுமதியின் பேரில் இங்கு வெளியிடப்படுகிறது.

முத‌லாளித்துவத்தை ஆராதிப்பவர்கள், நடப்புலக வாழ்வின் போக்கிலேயே அதன் சொகுசுகளை அனுபவித்துச் செல்வதுதான் வாழ்க்கை என்பவர்கள், மதவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என அனைவரும் ஸ்டாலின் எனும் புள்ளியிலிருந்துதான் தங்களின் கம்யூனிச வெறுப்பைத் தொடங்குகிறார்கள். அந்த அளவுக்கு தோழர் ஸ்டாலின் குறித்த அவதூறுகள் எல்லா வடிவங்களிலும் நிறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அவதூறுகளை விலக்கி உண்மைகளை கண்டுணர்ந்து கொள்வது கடினமானதாக தோற்றமளித்தாலும், மிகவும் அவசியமானதாகும். இந்த அவதூறுகளை அடித்துத்துவைத்து சுத்தம் செய்வது அந்த அவதூறுகள் வீழ்படிவுகளாக எஞ்சியிருக்கும் வரையில் ஒவ்வொரு தோழருக்கும் கடமையாகும்.

அந்த வகையில் இரயாகரனின் இந்த நூல் தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை மிகத்துல்லியமான முறையில் புள்ளிவிபரங்கள், தரவுகளுடன் ஆதாரபூர்வமாக உடைத்து உண்மையைக் காட்டுகிறது. மட்டுமல்லாது சோவியத் யூனியனின் மீதான புரட்டல்வாதங்களையும் அவை என்ன நோக்கத்திற்காக கட்டியமைக்கப்பட்டு பரப்பப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

தோழர்கள் இதை விரிவாக எடுத்துச்செல்லவேண்டும் என்பது என்னுடைய ஆவல்.

தோழமையுடன்
செங்கொடி
*****************************************************************************************
ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

தூற்றுவதலோ, திரிப்பதலோ, திருத்துவதலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை

Wednesday, September 15, 2010

காஷ்மீரில் கல்லெறிந்தால் தில்லியில் விழுமா?


கடந்த சில மாதங்களாக ‘காஷ்மீரில் வன்முறை’ ‘வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழப்பு’ என்று செய்தி ஊடகங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றன. இராணுவத்தை எதிர்த்து காஷ்மீரிகள் கல்லெறியும் காணொளிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு அதை பயங்கரவாதச் செயல் போல் சித்தரிக்கின்றன. யார் வன்முறையாளர்கள்? யார் எதிர்கொள்பவர்கள்? என்பதற்கு தேசியம் எனும் சொல்லே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காஷ்மீரில் எறியப்படும் கற்கள் இவர்களின் தேசியக் கேடயத்தையும் துளைத்துக்கொண்டு செல்லும் வீரியத்தை நாளுக்கு நாள் பெற்றுவருகிறது.

Tuesday, September 7, 2010

செப்டம்பர் நினைவுகள்

காணொளியில் புதியது


செப்டம்பர் நினைவுகள் 

தமிழ் ஆவணப்படம். 

உலகில் அமெரிக்கா செய்த கொடுமைகளின் விவரணம். இதில் பட்டியலிட்டிருப்பது கொஞ்சம் தான், இன்னும் இருக்கிறது ஏராளம்.

Monday, September 6, 2010

மாசேதுங்குடன் சில செவ்விகள்

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௫

நூலின் இடஒதுக்கீடு வரையறை காரணமாக 1936 ஆம் ஆண்டில் மாசேதுங்குடனான் எனது செவ்வியின் மூலப்பிரதிகள் “சீனாவின் மீது செந்தாரகை”யில் முழுமையாக இடம்பெறவில்லை. கீழே இடம்பெறும் பகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் கருத்தைக் கவர்வனவாக அமையலாம்.
பாவ் அன் 1936 ஜூலை 23

கம்யூனிஸ்ட் அகிலம், சீனா, வெளி மங்கோலியா பற்றி

ஸ்னோ: நடைமுறைச் சாத்தியத்தில் சீனப்புரட்சி வெற்றிபெரும் பட்சத்தில், சோவியத் சீனாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் நட்புணர்வு மூன்றாவது அகிலம் அல்லதுஇதுபோன்ற ஒரு அமைப்பின் கட்டுக்கோப்பினுள் பேணப்படுமா? அல்லது பெரும்பாலும் ஒருவகையான அரசுகளுக்கிடையிலான உண்மையான இணைப்பு ஒன்று ஏற்படுமா? மாஸ்கோவிலுள்ள தற்போதைய அரசுடன் வெளி மங்கோலியா கொண்டிருக்கும் உறவுடன் ஒப்பிடக்கூடியதாக சீன சோவியத் அரசின் உறவு அமையுமா?

Thursday, September 2, 2010

ஆரியவதியும் சில ஆணிகளும்



ஆரியவதிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு எதிராக நமது குரலை பதிவு செய்யும் இந்நேரத்தில் இன்னொன்றையும் பதிவு செய்வது தேவையாக இருக்கிறது. ஆரியவதி விவகாரத்தை சிங்கள் ஊடகங்கள் ஒரு அரசியல் வடிவமாக முன்னெடுக்கின்றன. சௌதி தூதரகத்திடம் தனது கண்டனங்களை பதிவு செய்வது, இலங்கைப் பெண்கள் சௌதிக்கு வேலைக்காக செல்வதை தடை செய்யவிருப்பதாக செய்தி பரப்புவது என்று இலங்கை அரசுடன் இணைந்து உலக அரங்கில் முந்தள்ளுவதன் மூலம் இலங்கையில் இன்றளவும் நிகழ்ந்துவரும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும் வதைகளையும் மறைக்க முயல்கிறது. 


முழுவதும் வாசிக்க‌