நண்பர்களே, தோழர்களே,
தோழர் மாவோவின் வாழ்வை சுருக்கமாக, தெளிவாக எடுத்துக்காட்டிய “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தோழர் இரயாகரனின் “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்படவிருக்கிறது. இது இன்னும் நூலாக வெளிவரவில்லை என்றாலும் தோழரின் சிறப்பு அனுமதியின் பேரில் இங்கு வெளியிடப்படுகிறது.
முதலாளித்துவத்தை ஆராதிப்பவர்கள், நடப்புலக வாழ்வின் போக்கிலேயே அதன் சொகுசுகளை அனுபவித்துச் செல்வதுதான் வாழ்க்கை என்பவர்கள், மதவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என அனைவரும் ஸ்டாலின் எனும் புள்ளியிலிருந்துதான் தங்களின் கம்யூனிச வெறுப்பைத் தொடங்குகிறார்கள். அந்த அளவுக்கு தோழர் ஸ்டாலின் குறித்த அவதூறுகள் எல்லா வடிவங்களிலும் நிறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அவதூறுகளை விலக்கி உண்மைகளை கண்டுணர்ந்து கொள்வது கடினமானதாக தோற்றமளித்தாலும், மிகவும் அவசியமானதாகும். இந்த அவதூறுகளை அடித்துத்துவைத்து சுத்தம் செய்வது அந்த அவதூறுகள் வீழ்படிவுகளாக எஞ்சியிருக்கும் வரையில் ஒவ்வொரு தோழருக்கும் கடமையாகும்.
அந்த வகையில் இரயாகரனின் இந்த நூல் தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை மிகத்துல்லியமான முறையில் புள்ளிவிபரங்கள், தரவுகளுடன் ஆதாரபூர்வமாக உடைத்து உண்மையைக் காட்டுகிறது. மட்டுமல்லாது சோவியத் யூனியனின் மீதான புரட்டல்வாதங்களையும் அவை என்ன நோக்கத்திற்காக கட்டியமைக்கப்பட்டு பரப்பப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
தோழர்கள் இதை விரிவாக எடுத்துச்செல்லவேண்டும் என்பது என்னுடைய ஆவல்.
தோழமையுடன்
செங்கொடி
*****************************************************************************************
ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1
தூற்றுவதலோ, திரிப்பதலோ, திருத்துவதலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை
No comments:
Post a Comment